தென்னாப்பிரிக்கா டிச, 13
இந்தியா-தென்னாபிரிக்கா இடையிலான இரண்டாவது T20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 19.3 ஓவரில் ஏழு விக்கெட் இழப்பிற்கு 180 ரன்கள் எடுத்தது அப்போது மழை குறிக்கிட்டதால் ஆட்டம் நிறுத்தப்பட்டு முதல் இன்னிங்ஸ் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. இதனால் போட்டி டிஎல்எஸ் முறைக்கு மாற்றப்பட்டு 15 ஓவர்களில் 152 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. அதில் 5 விக்கெட் வித்தியாசத்தில் தென்ஆப்பிரிக்கா வெற்றி பெற்றது.