Category: மாவட்ட செய்திகள்

அருப்புக்கோட்டை பகுதியில் உரமிடும் பணிகள் ஆரம்பம்.

விருதுநகர் அக், 17 அருப்புக்கோட்டை, பாளையம்பட்டி, கோபாலபுரம், கோவிலாங்குளம், புளியம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் மானாவாரியாக கம்பு, சோளம், ஊடுபயிர்களாக மொச்சை, வெண்டை போன்றவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இப்பகுதி விவசாயிகள் பருவமழையை நம்பி ஆடி மற்றும் ஆவணி…

நெல்லை அரசு மருத்துவமனையில் விழிப்புணர்வு பேரணி.

நெல்லை அக், 17 ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 17 ம்தேதி உலக விபத்து காய தினமாக கடைபிடிக்கப்படுகிறது. மிகவும் ஆபத்தான கட்டத்தில் ஓர் உயிரை பாதுகாத்து உடல் காயத்தால் உண்டாகும் மரணத்தை தவிர்க்க கையாள வேண்டிய வழிமுறைகளை கடைபிடித்து நடைமுறைப்படுத்துவதின் முக்கியத்துவத்தை…

ஆவடி மாநகராட்சியில் ரூ.1.35 கோடியில் 6 இடங்களில் மின்சார டிரான்ஸ்பார்மர் பேனல்.

சென்னை அக், 17 சென்னைக்கு அடுத்தபடியாக ஆவடி மாநகராட்சியில் பூமிக்கு அடியில் கேபிள் மூலம் மின்சாரம் அமைக்கப்பட்டு அதன் அடிப்படையில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் 13 பேனல்கள் மற்றும் ஆவடி காமராஜர் நகர் பகுதியில் 15 பேனல்கள்…

முஸ்லிம் ஐக்கிய ஜமாத் சார்பாக மிலாடி நபி மாநாடு.

மதுரை அக், 17 முஸ்லிம் ஐக்கிய ஜமாத் சார்பாக மிலாடி நபி மாநாடு முஸ்லிம் ஐக்கிய ஜமாத் தலைவர் ராஜாஹசன் தலைமையில் தெற்கு வெளி வீதி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், மதுரை முஸ்லிம் ஐக்கிய ஜமாத் உயர்மட்ட குழு, மதுரை…

மாநில அளவில் ஆர்ப்பாட்டம் நடத்த ஆசிரியர் கூட்டணி முடிவு.

திருச்சி அக், 17 தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில செயற்குழு கூட்டம் திருச்சி ஆசிரியர் இல்லத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநிலத் தலைவர் மணிமேகலை தலைமை தாங்கினார். துணை பொதுச் செயலாளர் கணேசன், பொதுக்குழு உறுப்பினர் ஜான் கிறிஸ்துராஜ் ஆகியோர் முன்னிலை…

அதிமுக. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்.

கிருஷ்ணகிரி அக், 17 கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட அதிமுக. சார்பில் பொன்விழா நிறைவு மற்றும் 51ம் ஆண்டு தொடக்க விழாவை கொண்டாடுவது குறித்து மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் மாவட்ட அவைத்தலைவர் காத்தவராயன் தலைமை தாங்கினார். நகர செயலாளர்…

மாநில அளவிலான யோகா போட்டி.

கரூர் அக், 17 கரூர் சின்னாண்டாங்கோவிலில் 2-வது மாநில அளவிலான யோகா போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் சென்னை, கோவை, சேலம், திருச்சி, மதுரை உள்பட 15 மாவட்டங்களில் இருந்து 58 பள்ளிகளை சேர்ந்த 1,500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு…

நவ்வலடி பஞ்சாயத்தில் வளர்ச்சி திட்ட பணிகள்.

நெல்லை அக், 17 நெல்லை மாவட்ட ஊரக நிதி மற்றும் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்ட வளர்ச்சி திட்ட பணிகளுக்கு நல்வலடி பஞ்சாயத்தில் நெல்லை மாவட்ட பஞ்சாயத்து தலைவர் ஜெகதீஸ் அடிக்கல் நாட்டினார். இதில் ராதாபுரம் மேற்கு…

தக்கலை அருகே பேரிடர் மீட்பு ஒத்திகை.

கன்னியாகுமரி அக், 17 தக்கலை தீயணைப்பு நிலையம் சார்பில் பேரிடர் மீட்பு ஒத்திகை பயிற்சி தக்கலை அருகே உள்ள பரசேரி குளத்தில் நடந்தது. இதில் வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ள நிலையில் வெள்ளப்பெருக்கு காலங்களில் எப்படி தற்காத்துகொள்வது என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.…

பூட்டி கிடக்கும் கிராம நிர்வாக அலுவலகங்கள். சான்றிதழ்கள் பெற முடியாமல் மக்கள் பரிதவிப்பு.

கள்ளக்குறிச்சி அக், 17 சங்கராபுரம் ஒன்றியம் வடபொன்பரப்பி குறுவட்டத்தில் 50க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளது. இந்த கிராமங்களில் தனி தனியாக கிராம நிர்வாக அலுவலகம் உள்ளது. இதன் மூலம் அந்த பகுதியை சோந்த மக்கள் தங்களுக்கு தேவையான சான்றுகளை பெற்று பயனடைந்து…