Spread the love

திருச்சி அக், 17

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில செயற்குழு கூட்டம் திருச்சி ஆசிரியர் இல்லத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநிலத் தலைவர் மணிமேகலை தலைமை தாங்கினார். துணை பொதுச் செயலாளர் கணேசன், பொதுக்குழு உறுப்பினர் ஜான் கிறிஸ்துராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாநில பொதுச்செயலாளர் மயில் சிறப்புரை ஆற்றினார். கூட்டத்தில் தன் பங்கேற்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.

இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகள் களையப்பட வேண்டும். ஒன்றிய அரசு அறிவுத்துள்ளவாறு 1 .7. 2022 முதல் 4 சதவிகித அகவிலைப்படி உயர்வை, தமிழக அரசு தனது ஊழியர்களுக்கும் வழங்க வேண்டும். கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக ஒப்புதல் அளிக்கப்படாமல் உள்ள உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களின் பணி நியமனத்திற்கு கல்வித்துறை உடன் ஒப்புதல் வழங்கி ஊதியம் வழங்க வேண்டும்.

ஆசிரியர்களுக்கான பணி பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்ற வேண்டும். நடுநிலைப் பள்ளிகளுடன் இணைந்த அங்கன்வாடிகளில் முன் பருவ பயிற்சி பெற்ற ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகள் பற்றி வரும் நவம்பர் 3 ம்தேதி மாநில முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் தர்ணா போராட்டம் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர், மாநில செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். முடிவில் மாநில பொருளாளர் மத்தேயு நன்றி கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *