Spread the love

விருதுநகர் அக், 17

அருப்புக்கோட்டை, பாளையம்பட்டி, கோபாலபுரம், கோவிலாங்குளம், புளியம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் மானாவாரியாக கம்பு, சோளம், ஊடுபயிர்களாக மொச்சை, வெண்டை போன்றவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இப்பகுதி விவசாயிகள் பருவமழையை நம்பி ஆடி மற்றும் ஆவணி மாதங்களில் விதைப்பு செய்வது வழக்கம். அதேபோல் இந்த வருடமும் விதைப்பு செய்து மழைக்காக காத்திருந்த நிலையில் மழை இல்லாததால் நஷ்டம் ஏற்பட்டு விடுமோ என விவசாயிகள் கவலையில் இருந்தனர்.

இந்தநிலையில் தற்போது அருப்புக்கோட்டை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதால் விவசாயிகள் உற்சாகத்துடன் விவசாய பணியை தொடங்கி உள்ளனர். உரமிடும் பணி தற்போது விளைந்த பயிர்களுக்கு உரமிடும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *