Author: Mansoor_vbns

மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கைத்தறி சிறப்பு கண்காட்சி.

நெல்லை ஆகஸ்ட், 8 சுதேசி இயக்கத்தினை நினைவு கூறும் பொருட்டு கைத்தறி தொழிலின் முக்கியத்துவம் மற்றும் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு அதன் பங்களிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், கைத்தறி தொழிலை மேம்படுத்தி நெச வாளர்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் பொருட்டு ஆண்டுதோறும் ஆகஸ்ட்…

ஆளுநர், ரஜினிகாந்த் சந்திப்பு

சென்னை ஆகஸ்ட், 8 ஆளுநர் ஆர்.என்.ரவியை நடிகர் ரஜினிகாந்த் இன்று நேரில் சந்தித்தார். சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஆளுநரை நடிகர் ரஜினி சந்தித்துப் பேசி வருகிறார். இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று ஆளுநர் அலுவலகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.…

கொள்ளிடம் ஆற்றின் வலது கரையை கண்காணிப்பு அதிகாரி ஆய்வு.

மயிலாடுதுறை ஆகஸ்ட், 8 கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் அதிக அளவில் செல்வதால் கரையோர கிராமங்களை வெள்ளம் சூழ்ந்தது. ஆற்றின் வலது கரையை கண்காணிப்பு அதிகாரி ஆய்வு செய்தார். அப்போது முகாமில் தங்க வைக்கப்பட்டவர்களையும் பார்வையிட்டார். கரையோர கிராமங்களை வெள்ளம் சூழ்ந்தது மயிலாடுதுறை…

பதுக்கி வைத்திருந்த ரேஷன் அரிசி பறிமுதல்

திருமங்கலம் ஆகஸ்ட், 8 மதுரை மாவட்டம், திருமங்கலம் பகுதியில் ரேஷன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி பட்டைதீட்டி அதிக விலைக்கு விற்பனை செய்வதாக திருமங்கலம் வட்டாட்சியர் சிவராமனுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அவர் சோதனை மேற்கொண்டபோது திருமங்கலம் அருகே உள்ள கீழக்கோட்டை…

தர்மபுரி மாவட்டம் முழுவதும் கொரோனா தடுப்பூசி முகாம்.

தர்மபுரி ஆகஸ்ட், 8 தர்மபுரி மாவட்டத்தில் இதுவரை கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் மற்றும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் பயன்பெறும் வகையில் நேற்று 2,024 இடங்களில் தடுப்பூசி முகாம்கள் நடைபெற்றது. மேலும் அனைத்து அரசு ஆஸ்பத்திரிகள், அரசு ஆரம்ப சுகாதார…

பட்டிவீரன் பட்டியில் மா, மரக்கன்று நடும் பணி தீவிரம்.

திண்டுக்கல் ஆகஸ்ட், 8 பட்டிவீரன்பட்டி, அய்யம்பாளையம், சித்தரேவு, நெல்லூர், மருதாநதி அணை பகுதிகள் மற்றும் சித்தையன்கோட்டை, தேவரப்பன்பட்டி, தாண்டிக்குடி மலை அடிவார பகுதிகளில் சுமார் 3 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் மா விவசாயம் நடைபெற்று வருகிறது. இங்கு கல்லாமை, காசா, செந்தூரம்,…

மாநில அளவிலான ஈட்டி எறிதல் போட்டி.

திண்டுக்கல் ஆகஸ்ட், 8 டோக்கியோவில் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் கடந்த 7-ம்தேதி நடந்த ஒலிம்பிக் ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியாவை சேர்ந்த நீரச் சோப்ரா தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தார். அவரை கவுரவிக்கும் வகையில் இந்திய தடகள சம்மேளனம் சார்பில்…

திமுக சார்பில் கருணாநிதி நினைவு நாள் அனுசரிப்பு.

தர்மபுரி ஆகஸ்ட், 8 தர்மபுரி மாவட்டத்தில் திமுக சார்பில் கருணாநிதி நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. இதையடுத்து அவரது உருவப்படத்திற்கு கட்சி நிர்வாகிகள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். கருணாநிதி நினைவு நாள் தமிழக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 4-வது நினைவு நாள்…

தமிழக இளைஞர்களுக்கு வேலை நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

கடலூர் ஆகஸ்ட், 8 நெய்வேலியில் என்.எல்.சி இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் நடைபெற்ற என்ஜினீயர் தேர்வில் ஒருவர் கூட தமிழர்கள் இல்லை, என்.எல்.சி நிறுவனம் தமிழர்களை புறக்கணிக்கிறது என்றும், 299 என்ஜினீயர்கள் நியமனத்தை ரத்து செய்யக்கோரியும், தமிழக இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை…

ஒரேநாளில் காற்றாலைகளில் 119 மில்லியன் யூனிட் மின்உற்பத்தி.

கோயம்புத்தூர் ஆகஸ்ட், 8 தமிழகத்தில் காற்றின் வேகம் அதிகரித்து இருப்பதால் ஒரே நாளில் 119 மில்லியன் யூனிட் காற்றாலை மின்உற்பத்தி செய்து சாதனை படைத்துள்ளது என்று காற்றாலை மின் உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் கஸ்தூரி ரெங்கையன் தெரிவித்தார். மேலும் 13 தமிழகத்தை…