Author: Mansoor_vbns

மானூரில் ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பு கூட்டம்.

நெல்லை ஆக, 26 நெல்லை மாவட்டம் மானூர் யூனியனுக்கு உட்பட்ட அனைத்து ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பு கூட்டம் மானூர் ஊராட்சி அலுவலகத்தில் நடந்தது. இக்கூட்டத்திற்கு தலைவர் சின்னதுரை தலைமை தாங்கினார். செயலாளர் பீர்முகைதீன் வரவேற்றார். பொருளாளர் வெள்ளப்பாண்டி முன்னிலை வகித்தார். மானூரில்…

கிருபானந்த வாரியார் சுவாமிகள் பிறந்தநாள் விழா. ஆட்சியர் மாலை அணிவித்து மரியாதை

வேலூர் ஆக, 26 காங்கேயநல்லூரில் திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகளின் ஞான திருவளாகம் உள்ளது. இங்கு அவரின் பிறந்த நாள் விழா அரசு விழாவாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன், பாராளுமன்ற உறுப்பினர் கதிர்ஆனந்த் ஆகியோர் வாரியாரின்…

அண்ணா விளையாட்டு மைதானத்தில் மாணவர்களுக்கான தடகள போட்டிகள்

கடலூர் ஆக, 26 குறுவட்ட அளவில் பள்ளி மாணவர்களுக்கான தடகள விளையாட்டு போட்டிகள் கடலூர் மஞ்சக்குப்பம் அண்ணா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இதற்கு கடலூர் நகராட்சி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் குணசேகரன் தலைமை தாங்கி போட்டியை தொடங்கி வைத்தார். சிறப்பு அழைப்பாளராக…

தொடர் மழையால் அறுவடைக்கு தயார் நிலையில் நெற்பயிர்கள் சேதாரம்

மயிலாடுதுறை ஆக, 26 மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு பகுதியில் நிலத்தடி நீரைக் கொண்டு மின் மோட்டார் மூலம் முன்கூட்டியே குறுவை சாகுபடி பணியை விவசாயிகள் தொடங்கினர். காவிரி நீரும் முன்னதாக வந்ததால் குறுவை நெற்பயிர்கள் செழித்து வளர்ந்து வந்தன. இதைத் தொடர்ந்து…

தேங்காய் நார் ஏற்றி வந்த லாரியில் தீ விபத்து

புதுக்கோட்டை ஆக, 26 புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள பாப்பான்விடுதி யை சேர்ந்தவர் ரெங்கசாமி. இவர் பாச்சிக் கோட்டையில் இருந்து தனது லாரியில், தேங்காய் நார் ஏற்றிக்கொண்டு மறவம்பட்டியில் உள்ள மில்லில் இறக்குவதற்காக சென்று கொண்டிருந்தார். லாரி படேல் நகர்…

அரசு கல்லூரியில் சேர்ந்த திருநம்பி. படித்து மக்களுக்கு சேவை செய்ய விரும்புவதாக பேட்டி

ஊட்டி ஆக, 26 நீலகிரி மாவட்டம் மசினகுடி அடுத்த உண்டி மாயார் பகுதியை சேர்ந்தவர் ஹரி. திருநம்பியான இவரை குடும்ப சூழ்நிலை காரணமாக அவரது பெற்றோரால் கவனிக்க முடியவில்லை. இதையடுத்து ஹரியை ஊட்டியை சேர்ந்த வக்கீல் சவுமியா சாசு என்பவர் தத்து…

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்.

கன்னியாகுமரி ஆக, 26 குலசேகரத்தில் மார்க்சிஸ்ட் மின்கட்டணத்தை உயர்த்த தமிழக அரசு எடுத்துள்ள முடிவை கைவிட வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் குலசேகரம் மின்வாரிய அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. கட்சியின் குலசேகரம் வட்டார செயலாளர் விஸ்வம்பரன் தலைமை…

வத்திராயிருப்பில் குறுவட்ட அளவிலான கபடி போட்டி.

விருதுநகர் ஆக, 26 2022-2023ம் கல்வி ஆண்டிற்கான வத்திராயிருப்பு ஒன்றிய அளவிலான குறுவட்ட விளையாட்டு போட்டிகள், மாணவ, மாணவிகளுக்கான கபடி மற்றும் தடகளப்போட்டிகள் வத்திராயிருப்பு இந்து மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் தொடங்கியது. இந்த போட்டிகளில் 14 வயதுக்கு உட்பட்ட மற்றும் 17 வயதிற்குட்பட்ட…

புகையிலை பொருட்கள் விற்பனை குறித்த ஆய்வு.

திருவண்ணாமலை ஆக, 26 திருவண்ணாமலை அடுத்த பையூர் ஊராட்சியில் உள்ள பெட்டிக்கடைகள், மளிகைக் கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள், ஆன்ஸ், குட்கா உள்ளிட்ட பொருட்கள் விற்கப்படுகிறதா என ஆரணி துணை காவல் கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன் தலைமையில் ஆய்வாளர் புகழ், துணை…

அரசு பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்.

திண்டுக்கல் ஆக, 26 வேடசந்தூர் அருகே உள்ள காசிபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நடந்தது. இவ்விழாவுக்கு வேடசந்தூர் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் சவுடீஸ்வரி கோவிந்தன் தலைமை தாங்கினார். பெற்றோர்-ஆசிரியர் கழக தலைவர்…