திருவண்ணாமலை ஆக, 26
திருவண்ணாமலை அடுத்த பையூர் ஊராட்சியில் உள்ள பெட்டிக்கடைகள், மளிகைக் கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள், ஆன்ஸ், குட்கா உள்ளிட்ட பொருட்கள் விற்கப்படுகிறதா என ஆரணி துணை காவல் கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன் தலைமையில் ஆய்வாளர் புகழ், துணை ஆய்வாளர் சுந்தரேசன், ஷாபூதீன் மற்றும் காவல்துறையினர் சோதனை நடத்தினர்.
மேலும் ஒவ்வொரு கடைகளின் முன்பாக அறிவிப்பு பிரசுரங்களும் ஒட்டப்பட்டன. புகையிலை பொருட்கள் விற்கப்படவது தெரிந்தால் வாட்க் அப் மூலம் புகார் தெரிவிக்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.