சிவகங்கை நவ, 20
இளையான்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அரசு அலுவலர்கள், ஊராட்சி அளவிலான பணியாளர்கள் மற்றும் குடும்பத்தினர் கலந்து கொள்ளும் சிறப்பு மருத்துவ முகாம் ஊரக வளர்ச்சி முகமை மற்றும் ஊராட்சி துறை சார்பாக நடைபெற்றது. சுகாதாரத்துறை துணை இயக்குனர் விஜய் சந்திரன் தலைமை தாங்கினார். வட்டார மருத்துவ அலுவலர் ஆரோன், வட்டார வளர்ச்சி அலுவலர் சாந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இம்முகாமை தமிழரசி சட்ட மன்ற உறுப்பினர் ரவிக்குமார் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். அனைவருக்கும் சித்த மருத்துவ குழுவினர் இயற்கை உணவு வழங்கி, இயற்கை உணவுக்கான உணவுப் பொருட்கள் கண்காட்சியில் வைத்திருந்தனர். முகாமில் 302 பயனாளிகள் பங்கேற்றனர்.