திருப்புவனம் ஜூலை, 2
காவல் துறையினர் அடித்ததில் மரணமடைந்த அஜித்குமாரின் தாயார் மற்றும் தம்பியிடம் வீடியோ கால் மூலம் CM ஸ்டாலின் ஆறுதல் கூறினார். இதன்பின் அஜித்தின் தாயார் அளித்த பேட்டியில், தண்ணீர் கூட கொடுக்காமல் எனது பையனை காவல் துறையினர் அடித்து கொலை செய்ததாக முதல்வரிடம் கூறினேன். அதற்கு உடனே மன்னிப்பு கேட்ட ஸ்டாலின், அஜித்தின் தம்பிக்கு, படிப்புக்கு ஏற்ப அரசு வேலை தருவதாக உறுதியளித்தார் என கூறினார்.