சிவகங்கை செப், 12
சிவகங்கையில் அமைச்சர் உதயநிதி நேற்று முன்தினம் ஆய்வு மேற்கொண்டார். அப்போது திருப்பத்தூரில் உள்ள ஒரு பகுதியில் புதர் மண்டி கிடப்பதாக ஒருவர் மனு அளித்திருந்தார். மனு பற்றி பிடிஓ அதிகாரி சோமதாசிடம் உதயநிதி கேட்டார். அதற்கு அவர் அந்த இடம் சுத்தப்படுத்தப்பட்டதாக கூறினார். பின்னர் போனில் உதயநிதி விசாரிக்கையில், அதிகாரி கூறியது பொய் என தெரியவந்தது. இதையடுத்து சோமதாஸ் உடனடியாக பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.