புதுக்கோட்டை நவ, 19
புதுக்கோட்டை ஒன்றியப் பகுதிகளில் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை, வேளாண்மைத்துறை மற்றும் பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித்திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் சார்பில் முள்ளுர் தரிசு நிலத் தொகுப்பு திட்டப் பணிகளின்கீழ் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டுள்ளதை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு விவசாயிகளுக்கு மானிய விலையில் உளுந்து விதைகள் மற்றும் உயிர் உரங்களை வழங்கினார்.