திருவள்ளூர் நவ, 12
செங்குன்றத்தை அடுத்த அலமாதியில் இருந்து செங்குன்றம் நோக்கி மினி வேனில் செம்மரக்கட்டைகள் கடத்தி வரப்படுவதாக செங்குன்றம் உதவி ஆணையர் முருகேசனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின்பேரில் சோழவரம் காவல் துறையினர் ஜெகநாதன் மற்றும் காவல்துறையினர் எடப்பாளையம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக செங்குன்றம் நோக்கி வந்த மினிவேனை மறித்து சோதனை செய்தனர். அதில் 200 கிலோ செம்மரக்கட்டைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே காவல்துறைகள் அந்த செம்மரக்கட்டைகள் அனைத்தையும் பறிமுதல் செய்தனர். இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.