விக்கிரவாண்டி நவ, 11
விழுப்புரம் மாவட்ட புதிய அலை மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பு டிசம்பர் 3 இயக்கம் சார்பில் மாநில பொதுச் செயலாளர் அண்ணாமலை தலைமையில் மாவட்ட செயலாளர் தமிழரசி உட்பட 90பேர் கொண்ட குழுவினர் விக்கிரவாண்டி மாற்றுத்திறனாளிகள் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் அவர்கள் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சுமதியை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். மனுவில் கூறியிருப்பதாவது,
தேசிய மாற்றுத்திறனாளி அடையாள அட்டை வைத்திருக்கும் அனைவருக்கும் எவ்வித நிபந்தனையின்றி நீல நிற அட்டை வழங்க வேண்டும். மாற்றுத் திறனாளிகள் அலுவலகத்தில் மாற்றுத்திறானாளிகள் தன்னிச்சையாக சென்று வர சாய்தள வசதி அல்லது லிப்ட் வசதி ஏற்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என கூறியுள்ளனர்.
விக்கிரவாண்டி ஒன்றியம் கொங்கராம்பூண்டியில் நேற்று நடந்த மக்கள் தொடர்பு திட்ட முகாமில் பங்கேற்ற அதிகாரிகள் சென்றதால் ஒன்றியத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள், மாற்றுத்திறனாளிகள்நல அலுவலகம் முன்பு 3 மணி நேரம் அமர்ந்து காத்திருந்துமனு அளித்து சென்றனர்.