Spread the love

வேலூர் நவ, 9

இந்திய தேர்தல் ஆணையம் 2023 ஜனவரி 1 ம்தேதியை தகுதி ஏற்படுத்தும் நாளாக கொண்டு சிறப்பு சுருக்க திருத்தம் வாக்காளர் பட்டியல் தயாரிக்க உத்தரவிட்டுள்ளது. அதன்படி வேலூர் மாவட்டத்தில் 5 சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் இன்று வெளியிட்டார்.

இந்த வாக்காளர் பட்டியல் இன்று முதல் 08-12-2022 வரை ஒரு மாத காலத்திற்கு பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கும். வாக்காளர்களின் பெயர் சேர்த்தல் நீக்குதல் போன்றவற்றை இணையதளம் வாயிலாகவும் பட்டியலில் சேர்க்க நீக்கவும் செய்யலாம்.

அத்துடன் நவம்பர்12,13,26 மற்றும் 27 ஆகிய 4 விடுமுறை நாட்களிலும் சிறப்பு முகாம்கள் நடக்கவுள்ளது. இதனை மக்கள் பயன்படுத்திகொள்ள வேண்டும். மாவட்டத்திலுள்ள பொதுமக்களும் தங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இடம்பெ ற்றுள்ளதா என சரிபார்த்து, பெயர் சேர்க்க படிவம் 6A, ஆதார் என் சேர்க்க படிவம் 6 பி பட்டியலில் பெயர் நீக்கம் செய்ய படிவம் 7,திருத்தம் செய்ய படிவம் 8,முகவரி மாற்றம் செய்ய படிவம் 8A ஆகியவற்றின் விண்ணப்பம் செய்யலாம் என ஆட்சியர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *