கரூர் நவ, 8
கரூர் காந்திகிராமத்தில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. ஆசிரியர் செல்வம், இடைநிலை ஆசிரியர் திலகவதி ஆகியோர் புற்றுநோய் வருவதற்கான காரணங்களையும், அதனைத் தவிர்க்க வேண்டியதற்கான உணவு பழக்க வழக்கங்கள், பின்பற்ற வேண்டிய ஆரோக்கிய முறைகளையும் எடுத்து கூறினர். இதில், பள்ளி தலைமை ஆசிரியர் பூங்கொடி, ஆசிரியர் நிர்மலா, மாணவர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.