திருவள்ளூர் நவ, 7
போரூர் ஏரியில் இருந்து வெளியேறும் உபரி நீர் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து தந்தி கால்வாய் மூலமாக வரும் நீரால் அய்யப்பன் தாங்கல், பரணி புத்தூர், கொளுத்து வான்சேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்குவது வழக்கம். இந்த நிலையில் பரணி புத்தூர் அருகே தாம்பரம் – மதுரவாயல் நெடுஞ்சாலையை கடந்து மழை நீர் செல்ல வழி இல்லாததால் சாலையை சேதப்படுத்தாமல் புஷ் துரோ முறையில் சாலையின் கீழ் 54 மீட்டருக்கு கல்வெட்டு கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. ஒரு கல்வெட்டு 11 மீட்டர் நீளம் கொண்டது, ஐந்து மீட்டர் அகலமும், 1.4 மீட்டர் உயரம் கொண்டது போல் அமைக்கப்பட்டு உள்ளது. தற்போது 4-வது கல்வெட்டு அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனை அமைச்சர் அன்பரசன் நேரில் சென்று ஆய்வு செய்தார். ரயில்வே துறையில் மட்டுமே சாத்தியமான இந்த பணிகள் தற்போது முதல் முறையாக தாம்பரம் – மதுரவாயல் நெடுஞ்சாலையை சேதப்படுத்தாமல் நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.