Spread the love

செங்கல்பட்டு நவ, 4

புயல், பலத்த மழை போன்ற பேரிடர் காலங்களில் இடைவிடாது பெய்யும் மழையால் பல வீடுகளை வெள்ளம் சூழ்ந்து மக்கள் வெளியேற முடியாமல் வீடுகளில் சிக்கி தவிப்பது வழக்கம். அதேபோல் குளம், ஏரிகளில் நீர் வரத்து அதிகரிப்பின் போது பலர் தவறி விழுந்து விடுகின்றனர்.

அவ்வாறு நீரில் மூழ்கி சிக்கி தவிக்கும் மக்களையும் எப்படி காப்பாற்றுவது, அதேபோல் மழை காலங்களில் பலத்த கடல் சீற்றத்தின் போது கடலில் குளித்து அலையில் சிக்குபவர்களை காப்பாற்றி எப்படி முதலுதவி சிகிச்சை அளிப்பது போன்ற ஒத்திகையை தமிழக தீயணைப்பு மற்றும் மீட்புபணிகள் துறை இயக்குனர் காவல் தலைமை இயக்குனர் ரவி முன்னிலையில் மாமல்லபுரம் தீயணைப்பு துறையினர் வெண்புருஷம் கடற்கரை பகுதியில் செயல் முறை விளக்கம் செய்து காட்டினர்.

பின்னர் தீயணைப்பு துறை காவல் தலைமை இயக்குனர் ரவி மழை கால மீட்பு பணிக்கு தயார் நிலையில் உள்ள தீயணைப்பு மற்றும் மீட்புபணிகள் துறை வீரர்களுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் மாமல்லபுரம் தீயணைப்பு துறை அலுவலர் சண்முகம் மற்றும் கல்பாக்கம், திருக்கழுக்குன்றம், சிறுசேரி, கேளம்பாக்கம், மறைமலைநகர் ஆகிய பகுதிகளை சேர்ந்த தீயணைப்பு வீரர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *