Spread the love

புதுக்கோட்டை அக், 19

விராலிமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்கப்படுவதாக விராலிமலை காவல் துறையினருக்கு தகவல் கிடத்தது. அந்த தகவலின்பேரில் காவல் துணை ஆய்வாளர் கோவிந்தராஜன் தலைமையிலான காவல்துறையினர் முல்லையூர் மற்றும் வேலூர் பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது முல்லையூர் குளத்து ஆத்துப்பட்டியை சேர்ந்த வெள்ளைச்சாமி மகன் ரவிச்சந்திரன் என்பவர் பூமரம் ஆத்துப்பட்டி அருகே உள்ள மளிகைக்கடையில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்து தெரியவந்தது. இதையடுத்து அவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

இதேபோல் வேலூரை சேர்ந்த துரைச்சாமி மனைவி அஷினாபேகம் என்பவர் அவரது பெட்டிக்கடையில் வைத்து புகையிலை பொருட்கள் விற்பனை செய்வததை காவல்துறையினர் கண்டு பிடித்தனர். இதையடுத்து காவல் துறையினர் அவரை கைது செய்தனர். அதனைத் தொடர்ந்து அவர்கள் 2 பேர்களிடமிருந்து 2 செல்போன்கள், ஸ்கூட்டர் மற்றும் 11 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *