Spread the love

வேலூர் அக், 16

பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் உலமாக்கள் மற்றும் பணியாளர் நல வாரிய உறுப்பினர்களுக்கு இலவச மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்தது. மாவட்ட ஆட்சியர் குமாரவேல்பாண்டியன் தலைமை தாங்கினார். பாராளுமன்ற உறுப்பினர் கதிர்ஆனந்த், சட்ட மன்ற உறுப்பினர்கள் நந்தகுமார், கார்த்திகேயன், அமலு விஜயன், மேயர் சுஜாதா, மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பாபு, ஒன்றிய குழு தலைவர் அமுதா ஞானசேகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில், 488 ஆண்கள், 98 பெண்கள் என மொத்தம் 586 நலவாரிய உறுப்பினர்களுக்கு ரூ.30 லட்சத்து 15 ஆயிரம் மதிப்பிலான இலவச மிதிவண்டிகளை மாவட்ட ஆட்சியர் குமாரவேல்பாண்டியன், பாராளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் ஆகியோர் வழங்கினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *