கரூர் அக், 16
குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை திருச்சி சரக காவல் கண்காணிப்பாளர் சுஜாதா உத்தரவின் பேரில் கரூர் துணை காவல் கண்காணிப்பாளர் சுதர்சன் மேற்பார்வையில், காவல் ஆய்வாளர் கோபிநாத் தலைமையில் குற்ற புலனாய்வுத்துறை காவல்துறையினர் வெங்கமேடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது கிடைத்த ரகசிய தகவலின்பேரில், வெங்கமேடு பகுதிக்குட்பட்ட பசுபதி தெரு கடைசியில் உள்ள கிணற்றின் அருகே இருந்த மோட்டார் அறை மற்றும் அருகில் நின்றிருந்த ஆம்னி வேனை காவல் துறையினர் சோதனை செய்தனர்.அப்போது மோட்டார் அறையில் 2½ டன் மற்றும் ஆன்மி வேனில் ½ டன் என மொத்தம் 3 டன் ரேஷன் அரிசி விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து 3 டன் அரிசியுடன், அந்த ஆம்னி வேனையும் காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.