தர்மபுரி அக், 16
மின்வாரிய தொழிலாளர்களுக்கு 25 சதவீத தீபாவளி போனஸ் வழங்கக்கோரி தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் சார்பில் தர்மபுரி மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு திட்ட இணைச்செயலாளர் ஜெகநாதன் தலைமை தாங்கினார். மாநில துணைத்தலைவர் ஜீவா, மாவட்ட செயலாளர் லெனின் மகேந்திரன், நிர்வாகிகள் சீனிவாசன், ஜெயக்குமார், காளியப்பன், ஆறுமுகம் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள். இதில் மின்வாரிய பணியாளர்கள், தொழிலாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்.