Spread the love

திருப்பூர் அக், 14

அனுப்பர்பாளையம் திருப்பூர் வடக்கு ஒன்றியத்திற்குட்பட்ட அரசு மற்றும் நிதியுதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் 2ம் பருவ பயிற்சி திருப்பூர் 15 வேலம்பாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் 3 நாட்கள் நடைபெற்றது. இதில் 1-ம் வகுப்பு முதல் 5ம் வகுப்புகள் வரை கற்பிக்கும் இடைநிலை ஆசிரியர்கள், தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் தற்காலிக இடைநிலை ஆசிரியர்கள் உள்பட 448 பேர் கலந்து கொண்டனர்.

மேலும் இந்த பயிற்சியை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி, மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர், மாவட்ட கல்வி அதிகாரிகள் (இடைநிலை மற்றும் தொடக்கநிலை), மாவட்ட உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் பார்வையிட்டு, ஆசிரியர்களுக்கு ஆலோசனைகளையும், அறிவுரைகளையும் வழங்கினார்கள். திருப்பூர் வடக்கு வட்டார கல்வி அதிகாரிகள், வட்டார வள மைய பொறுப்பு ஆசிரியர் பயிற்றுநர் மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்கள் இந்த பயிற்சி முகாமை ஒருங்கிணைத்து நடத்தினார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *