வேலூர் அக், 13
வேலூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில் பணிபுரியும் அலுவலர்களுக்கு மருத்துவ முகாம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் குமாரவேல்பாண்டியன் தலைமை தாங்கினார். ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் ஆர்த்தி முன்னிலை வகித்தார். அலுவலர்கள் பலர் கலந்து கொண்டு மருத்துவ பரிசோதனை செய்து கொண்டனர்.
இதேபோல மாவட்டத்தில் உள்ள 7 ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும் மருத்துவ பரிசோதனை முகாம் நடந்தது. இதில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்ந்த அலுவலர்கள், பணியாளர்கள் 2,091 பேர், பிறதுறை பணியாளர்கள் 26 பேர் என மொத்தம் 2,117 பேருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.