Spread the love

கரூர் அக், 13

நொய்யல் பகுதியில் ஓலப்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் பொதுமக்களுக்கு யோகா பயிற்சி மற்றும் யோகா குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

இம்முகாமில் ஓலப்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய ஹோமியோபதி மருத்துவர் சாந்தி தலைமையில், சுகாதார செவிலியர் சரஸ்வதி, சுகாதார தன்னார்வலர் ஈஸ்வரி ஆகியோர் கொண்ட குழுவினர் கலந்து கொண்டு முகாமில் கலந்து கொண்ட பெண்களுக்கு யோகா பயிற்சி அளித்தனர்.

தொடர்ந்து பொதுமக்களுக்கு யோகா பயிற்சி குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் நொய்யல் சுற்றுவட்டார பகுதி சேர்ந்த பெண்கள் கலந்து கொண்டு யோகா பயிற்சி செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *