நீலகிரி அக், 12
கூடலூர், மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கு எதிராக கடந்த 2 ம்தேதி காந்தி ஜெயந்தி நாளில் சமூக நல்லிணக்க மனித சங்கிலி நடைபெறும் என விடுதலை சிறுத்தைகள் மற்றும் தோழமை கட்சிகள் அறிவித்தது. சட்டம் ஒழுங்கு பிரச்சினையை காரணம் காட்டி காவல்துறை அனுமதி மறுத்தது. தொடர்ந்து 12 ம்தேதி மனித சங்கிலி நடத்தி கொள்ள நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
அதன்படி மாநிலம் முழுவதும் நேற்று சமூக நல்லிணக்க மனித சங்கிலி நடைபெற்றது. நீலகிரி மாவட்டத்தில் கூடலூர் பழைய மற்றும் புதிய பஸ் நிலையத்தில் சமூக நல்லிணக்க மனித சங்கிலி நடைபெற்றது. விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் சகாதேவன் தலைமை தாங்கினார். வாசு, முகமது கனி, அம்சா, அனீபா, சாதிக் பாபு உள்பட தோழமைக் கட்சியினர் பலர் கலந்துகொண்டனர்.