தர்மபுரி ஆகஸ்ட், 4
கடந்த சில நாட்களாக தர்மபுரியில்தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று அதிகாலை வரை பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. மாவட்டத்தில் அதிகபட்சமாக பாலக்கோட்டில் 75 மி.மீ. மழை பெய்தது.
இந்த மழை காரணமாக மாவட்டத்தில் பல்வேறு பகுதியில் உள்ள ஏரிகள், குளங்கள், குட்டைகளில் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் உயர்வதற்கான வாய்ப்புகள் உருவாகி உள்ளன. இதன் காரணமாக பணிகள் விறுவிறுப்பு அடைந்து உள்ளன.
#Vanakambharatham#Dharmapuri#Rain#news