Spread the love

சென்னை அக், 9

தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று தெரிவித்தது.

இந்நிலையில், சென்னையின் பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் நள்ளிரவு முதல் பெய்து வரும் மழை இன்று காலையும் நீடித்து வருகிறது.

சென்னையின் ஒரு சில பகுதிகளில் காலையும் பெய்து வரும் மழையால் வாகன ஓட்டிகள் சற்று சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *