Spread the love

தர்மபுரி அக், 8

பட்டு வளர்ச்சி துறை சார்பில் செயல்பட்டு வரும் பட்டுக்கூடுகள் ஏல அங்காடிக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் பட்டுக்கூடுகளை விற்பனைக்காக கொண்டு வருகிறார்கள். இந்த அங்காடிக்கு நேற்று விவசாயிகள் 2,093 கிலோ பட்டுக்கூடுகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர். நேற்று முன்தினம் அதிகபட்சமாக ஒரு கிலோ ரூ.730-க்கு விற்பனையான பட்டுக்கூடு நேற்று கிலோவிற்கு ரூ.8 விலை குறைந்தது.

இதனால் பட்டுக்கூடு ஒரு கிலோ அதிகபட்சமாக ரூ.722க்கும், குறைந்தபட்சமாக ரூ.426க்கும், சராசரியாக ரூ.628க்கும் விற்பனையானது. மொத்தம் ரூ.13 லட்சத்து 13 ஆயிரத்து 996க்கு பட்டுக்கூடுகள் விற்பனையானது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *