Spread the love

நீலகிரி அக், 7

மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை இணை அமைச்சர் முருகன் நீலகிரி மாவட்டத்தில் நடக்கும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக 2 நாள் பயணமாக ஊட்டிக்கு வந்தார். இதற்காக நேற்று சென்னையில் இருந்து விமானம் மூலம் கிளம்பி மதியம் 3 மணிக்கு கோவை வந்தார். அங்கிருந்து கார் மூலம் சாலை மார்க்கமாக ஊட்டி சேரிங்கிராஸ் பகுதிக்கு வந்தார்.

அங்கு மாவட்ட தலைவர் மோகன்ராஜ் தலைமையில் பட்டாசு வெடித்து மேளதாளம் முழங்க அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும் பெண்கள் ஆரத்தி எடுத்து வாழ்த்து தெரிவித்தனர். இதன் பின்னர் அவர் கோழிப்பண்ணை பகுதியில் உள்ள வெறி நாய் கடிக்கு மருந்து தயாரிக்கும் நிறுவனத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதையடுத்து ஊட்டியில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் தங்கினார். இந்த நிலையில் இன்று ஒக்கிலியர் திருமண மண்டபத்தில் மத்திய இணை அமைச்சர் முருகன் தலைமையில் எதிர்வரும் லோக்சபா தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்து ஆலோசனை கூட்டம் நடக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *