கிருஷ்ணகிரி அக், 7
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி ஒன்றியத்தில் ஊரக வளர்ச்சித் துறை சார்பில் ரூ.41 லட்சத்து 25 ஆயிரம் மதிப்பில் வளர்ச்சி பணிகள் நடந்து வருகின்றன. இந்த பணிகளை மாவட்ட ஆட்சியர் ஜெயசந்திரபானு ரெட்டி நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மேலும் சூளகிரி ஒன்றியம் இம்மிடிநாயக்கபள்ளி ஊராட்சி பெரிய பேடப்பள்ளியில், வட்டார நாற்றுப்பண்ணை 2½ ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள முருங்கை, ஜம்புநாவல், புளியன், புங்கன், சில்வர், தேக்கு, கொய்யா, நொச்சி, வேம்பு மரச்செடிகள் உற்பத்தி செய்யப்பட்டு வருவதையும், உற்பத்தி செய்யும் விதம் குறித்தும் பணியாளர்களிடம் கேட்டறிந்தார். மரக்கன்றுகள் நடும் பணி மேலும் சாலையோரத்தில் 200 மரக்கன்றுகள் நடும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்து, அவற்றை தொடர்ந்து கண்காணித்து, நல்லமுறையில் வளர்க்க வேண்டும் என்று அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
மேலும் இந்த ஆய்வின் போது வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கோபாலகிருஷ்ணன், சிவகுமார், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் டென்சிங், உமாசங்கர் உள்பட பலர் உடன் இருந்தனர்.