கிருஷ்ணகிரி அக், 5
வேப்பனப்பள்ளி அருகே உள்ள ஜொடுகொத்தூர் கிராமத்தில் வீட்டில் மதுபாட்டில்கள் பதுக்கி வைத்து விற்பதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து காவல் துறையினர் அப்பகுதியில் சோதனை செய்தனர். அப்போது மோகன் என்பவர் வீட்டில் மதுபாட்டில் வைத்து விற்பனை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து அவரை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் வீட்டில் பதுக்கி வைத்திருந்த மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.