Spread the love

தென்காசி அக், 3

ஆலங்குளம் ஒன்றியத்திற்குட்பட்ட காவலாகுறிச்சி ஊராட்சியில் கிராமப்புற பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக மகளிர் சுய உதவி குழுக்களின் மூலமாக பால் கொள்முதல் நிலையம் அமைக்கப்படவேண்டும் என்பதற்காக புதிய திட்டத்தினை ஆலங்குளம் ஒன்றிய குழு தலைவர் திவ்யா மணிகண்டன் முயற்சியில் திட்ட அறிக்கை தயார் செய்து தென்காசி மாவட்ட ஆட்சியரிடம் சமர்ப்பிக்கபட்டது. இந்த திட்டத்தை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் திட்டத்தினை பாராட்டி அதே ஊரில் ஏற்கனவே இயங்கி வரும் தனியாருக்கு சொந்தமான பால் குளிரூட்டும் நிலையத்தை நேரில் சென்று பார்வையிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *