Spread the love

நெல்லை செப், 30

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் நெல்லை மின் பகிர்மான வட்டத்தின் நெல்லை நகர்ப்புற கோட்டம் சார்பில் பேட்டையில் புதிதாக மின்மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது.மேலும் பேட்டை பிரிவுக்கு உட்பட்ட 22-வது வார்டு திருத்து பகுதியில் புதிதாக 63 கிலோவாட் மின்மாற்றி ரூ.4.26 லட்சம் மதிப்பீட்டில் நிறுவப்பட்ட மின்மாற்றி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. இதனால் அப்புதி மக்களுக்கு குறைந்த மின்னழுத்தம் சரி செய்யப்பட்டு சீரான மின் விநியோகம் வழங்கப்படும் என்பதால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். புதிய மின்மாற்றியை மாநகராட்சி மேயர் சரவணன் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார்.இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி துணை மேயர் ராஜூ, நெல்லை கோட்ட செயற் பொறியாளர் முத்துக்குட்டி, பழைய பேட்டை உதவி செயற்பொறியாளர் (பொறுப்பு) சங்கர், உதவி மின் பொறியாளர்கள் சரவணன், ஜன்னத்துல் சிபாயா மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *