Spread the love

ஐதராபாத் செப், 29

தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவின் தாயார் இந்திரா தேவி கடந்த சில வாரங்களாக உடல் நலக்குறைவால் ஐதராபாத்தில் உள்ள ஏஐஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். வென்டிலேட்டரில் வைக்கப்பட்டிருந்த அவர் நேற்று அதிகாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த செய்தி மகேஷ் பாபுவின் குடும்பம் மட்டுமல்லாமல் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மகேஷ் பாபுவின் தாயார் காலமானதை தொடர்ந்து நடிகர், நடிகைகள் என பலரும் நேரில் சென்று அஞ்சலி தெரிவித்து வரும் நிலையில், அவரது இறுதிச் சடங்குகள் விரைவில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *