Spread the love

விருதுநகர் செப், 26

மாவட்ட உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல் துறையினர் கிடைத்த ரகசிய தகவலின் பெயரில் ஆய்வாளர் ஆல்பின் பிரிஜிட் மேரி தலைமையில் காவல் துறையினர் ஏழாயிரம்பண்ணை எல்லம்மாள் காம்பவுண்ட் தெருவில் சோதனை நடத்தினர்.

அப்போது அங்கு தலா 50 கிலோ கொண்ட 23 ரேஷன் அரிசி மூடைகள் இருந்தன. அவற்றை கைப்பற்றிய காவல்துறையினர் அதுபற்றி அப்பகுதியில் விசாரித்த போது கோவில்பட்டியை சேர்ந்தவர்கள் ரேஷன் அரிசி மூடைகளை சேகரித்து வைத்து விட்டு சென்றுள்ளதாக தெரிவித்தனர். 23 ரேஷன் அரிசி மூடைகளில் 1,150 கிலோ ரேஷன் அரிசி இருந்தது. மூடைகளை கைப்பற்றிய உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல் துறையினர் இது பற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *