செங்கல்பட்டு செப், 24
திருக்கழுக்குன்றம் ஒன்றியம் நல்லாத்தூர் ஊராட்சியில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்புவிழா நடைபெற்றது, நல்லாத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் பிரமிளா சிவா தலைமை தாங்கினார். வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் சரவணன் வரவேற்புரை வழங்கினார். திருக்கழுக்குன்றம் ஒன்றிய குழுத்தலைவர் அரசு, தெற்கு ஒன்றிய திமுக. செயலாளர் எடையாத்தூர் சரவணன், மாவட்ட சட்ட மன்ற உறுப்பினர் கலாவதி நாகமுத்து, ஊராட்சி மன்ற துணைத்தலைவர் வெங்கட்மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.
மேலும் காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளரும், உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினருமான சுந்தர், காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர்செல்வம் ஆகியோர் கலந்துகொண்டு நெல் கொள்முதல் நிலையத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தனர்.