Spread the love

திருவள்ளூர் செப், 23

திருவள்ளூரை அடுத்த பூண்டி பகுதியில் குறைந்த மின்னழுத்தம் காரணமாக அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சீரான மின்சார வினியோகம் இல்லாமல் அவதிப்பட்டு வந்தனர். இதைத் தொடர்ந்து அந்த பகுதி மக்கள் தங்கள் பகுதியில் குறைந்த மின்னழுத்த மின்சாரத்தை போக்கும் வகையில் புதிய டிரான்ஸ்பார்மர் அமைத்து தரவேண்டும் என திருவள்ளூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரனிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

அதன் மீது உரிய விசாரணை மேற்கொண்ட சட்ட மன்ற உறுப்பினர் மின்வாரிய அதிகாரிகள் மூலம் பூண்டி பேருந்து நிறுத்தம் மற்றும் பூண்டி ஜெயராமன் தெரு போன்ற பகுதிகளில் ரூ.10 லட்சம் மதிப்பில் டிரான்ஸ்பார்மர்களை அமைக்க ஏற்பாடு செய்தார். அதைத்தொடர்ந்து டிரான்ஸ்பார்மர்கள் அமைக்கப்பட்டது.

இதன் திறப்பு நிகழ்ச்சியில் பூண்டி ஒன்றிய குழு துணைத்தலைவர் மகாலட்சுமி மோதிலால், பூண்டி ஊராட்சி மன்ற தலைவர் சித்ரா ரமேஷ், மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர் சிட்டிபாபு, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பூண்டி மோதிலால், மாவட்ட கவுன்சிலர் சிவசங்கரி உதயகுமார், ஒன்றிய நகர் மன்ற உறுப்பினர் விஜி, காஞ்சிபாடி சரவணன், திருவள்ளூர் முன்னாள் நகர்மன்ற தலைவர் பொன்.பாண்டியன், பட்டரை பாஸ்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *