காஞ்சிபுரம் செப், 20
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கிராமப்புற பகுதிகளில் சொர்ணாவாரி பருவத்திற்கான நெல் அறுவடை தொடங்கி நடைபெற்று வருகிறது. இதைத்தொடர்ந்து விவசாயிகள் பயன்பெறும் வகையில் கடந்த செப்டம்பர் மாதம் 1 ம்தேதி முதல் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறந்து வைக்கப்பட்டு வருகிறது.
மேலும் காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் தாலுகாவிற்கு உட்பட்ட தேவரியம்பாக்கம், அகரம் கிராமங்களில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பு விழா நடைபெற்றது. தேவரியம்பாக்கம் கிராமத்தில் ஊராட்சி மன்ற தலைவர் அஜய் குமார் தலைமையில் நடைபெற்ற விழாவில், உத்திரமேரூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சுந்தர், காஞ்சிபுரம் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் செல்வம், ஆகியோர் கலந்துகொண்டு நெல் பயிரிடும் விவசாயிகள் பயன் பெறும் வகையில் அரசு நேரடி கொள்முதல் நிலையங்களை கிராம விவசாயிகள், பொது மக்கள் முன்னிலையில் திறந்து வைத்தனர்.