Spread the love

கன்னியாகுமரி செப், 20

நாகர்கோவில் மற்றும் கன்னியாகுமரி ரயில் நிலையங்களில் இருந்து வெளி மாநிலங்களுக்கு ஏராளமான ரயில்கள் இயக்கப்படுகின்றன. இவ்வாறு நாகர்கோவிலில் இருந்து புறப்படும் ரயில்கள் அங்குள்ள யார்டுகளில் சுத்தம் செய்யும் பணிகள் நடைபெறும். இங்கு பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள ஏற்கனவே 3 பராமரிப்பு பிரிவுகள் உள்ளன.

இந்த நிலையில் ரூ.35 கோடி செலவில் கூடுதலாக 4 மற்றும் 5 என 2 பராமரிப்பு பிரிவுகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. 5வது பராமரிப்பு பிரிவு திறப்பு அதில் 5வது பராமரிப்பு பிரிவு பணி முடிவடைந்து விட்டது. ஆனால் 4வது பராமரிப்பு பிரிவு பணிகள் முடியவில்லை. அதைத்தொடர்ந்து 5வது பராமரிப்பு பிரிவு திறப்பு நிகழ்ச்சி நாகர்கோவில் கோட்டார் ரயில் நிலையத்தில் நடந்தது.

இதற்கு ரயில் நிலைய மேலாளர் முத்துவேல் தலைமை தாங்கினார். இதில் சிறப்பு விருந்தினராக ரெயில்வே வாரியத்தின் உறுப்பினர் மங்களா கலந்து கொண்டு பராமரிப்பு பிரிவை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இதில் ரயில்வே ஊழியர்கள், காவல் துறையினர் மற்றும் பணியாளா்கள் கலந்து கொண்டனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *