Spread the love

விழுப்புரம் செப், 19

திருவெண்ணெய்நல்லூர் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் அலுவலக கூட்ட அரங்கில் ஒன்றியக்குழு தலைவர் ஓம்சிவசக்திவேல் தலைமையில் நடைபெற்றது. வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முபாரக் அலிபேக், தேவராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றியக்குழு துணைதலைவர் கோமதிநிர்மல்ராஜ் வரவேற்றார். கூட்டத்தில் குடிநீர், சாலைவசதி, மின்விளக்கு உள்ளிட்ட வளர்ச்சி திட்டப்பணிகள் மற்றும் கவுன்சிலர்கள் தெரிவித்த தங்கள் பகுதியில் உள்ள குறைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஒன்றிய பணி மேற்பார்வையாளர்கள், அலுவலக பணியாளர்கள், நகர் மன்ற தலைவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். முடிவில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பாண்டியன் நன்றி கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *