Spread the love

நெல்லை செப், 17

நெல்லை மருத்துவக் கல்லூரியில் 1972-ம் ஆண்டு படித்த நெல்லை மாணவர்கள் 50 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி இன்று மருத்துவக்கல்லூரியில் மீண்டும் சந்தித்தனர். கல்லூரி அரங்கில் மாணவர்கள் முன்னிலையில் பொன்விழா நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் கல்லூரி டீன் டாக்டர் ரவிச்சந்திரன், துணை முதல்வர் சாந்தாராம், பேராசிரியை ஜெயந்தி, சுஜாதா ஆண்ட்ரூ கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர், டாக்டர் மோகன் ஆறுமுகப்பாண்டியன், சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் டாக்டர் குமாரதாஸ் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். பின்னர் கல்லூரி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டனர்.

இந்த நிகழ்ச்சியில் 72-ம் ஆண்டில் இணைந்து தற்போது நெல்லை மருத்துவக்கல்லூரியின் முன்னாள் பொறுப்பு முதல்வர் ராமகுரு, துரையப்பா, முன்னாள் சுகாதாரத்துறை இணை இயக்குனர் அருண்மொழி, ராமசாமி, சீனிவாசன், டாக்டர் வெங்கடேஸ்வரன் மற்றும் தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் ஜிம்லா மற்றும் மருத்துவர்கள் சுந்தர்ராஜன் பரமசிவன், ராஜன் ஜெயகுமார், ஹம்லவர்தினி செல்வராஜ், மோகன் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *