Spread the love

நெல்லை செப், 14

நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி அருகே உள்ள வீரவநல்லூர் அடுத்த புதுக்குடி பகுதியை சேர்ந்த பிச்சையா கார்த்திகேயன் என்பவரது மகன் வேலு என்ற சதிஷ் வயது கல்லூரி 2ம் ஆண்டு வரை படித்த இவர் அக்னிபாத் திட்டத்தின்கீழ் ராணுவத்தில் சேர கடந்த மாதம் விண்ணப்பித்திருந்த நிலையில் எழுத்து மற்றும் உடல் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற சதீஷ், மருத்துவ பரிசோதனையில் சிறிது கண் பார்வை குறைபாடு காரணமாக தோல்வியடைந்தார்.

இதனால் விரக்தி அடைந்த சதீஷ் அவரது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்த வீரவநல்லூர் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, அவரது உடலைக் கைப்பற்றி நெல்லை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து அவரது தந்தை பிச்சையாக கொடுத்த புகாரின் பேரில், வீரவநல்லூர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *