புதுச்சேரி செப், 13
தமிழகத்தில் கொரோனா தொற்று சில மாவட்டங்களில் தற்போது அதிகரித்து வருகின்றது. புதுவையில் இன்று காலை 10 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில் 1,367 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் 82 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இன்று 76 பேர் குணமடைந்தனர். தற்போது மருத்துவமனைகளில் 9 பேர், வீடுகளில் 332 பேர் என 341 பேர் தனிமைப்படுத்தப்பட்டு தொடர் சிகிச்சையில் உள்ளனர்.
மேலும் புதுவையில் தொற்று பரவல் 6 சதவீதமாகவும், குணமடைவது 98.67 சதவீதமாகவும் உள்ளது. நேற்று முதல் தவணை தடுப்பூசியை 176 பேரும், 2-வது தவணை தடுப்பூசியை 1,665 பேரும், பூஸ்டர் தடுப்பூசியை 4 ஆயிரத்து 712 பேரும் செலுத்திக்கொண்டனர். இதுவரை 21 லட்சத்து 46 ஆயிரத்து 32 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.