புதுடெல்லி செப், 11
விராட் கோலி என்னை விட திறமையானவர் என பிசிசிஐ தலைவர் கங்குலி தெரிவித்துள்ளார். இருவரின் ஆட்ட ஒப்பீடு குறித்து கங்குலியிடம் கேள்வி எழுப்பட்டது இது குறித்து அவர் கூறியதாவது,
ஒப்பிடுதல் ஒரு வீரராக திறமையின் அடிப்படையில் இருக்க வேண்டும். அவர் என்னை விட திறமையானவர் என்று நான் நினைக்கிறேன். அநேகமாக நான் விளையாடியதை விட அதிகமாக போட்டிகள் விளையாடுவார். தற்போது, நான் அவரை விட அதிகமாக விளையாடி இருக்கிறேன், ஆனால் அவர் அதை கடந்து விடுவார். அவர் அபாரமானவர் என தெரிவித்துள்ளார்.
மேலும் சமீபத்தில் நடந்த ஆசிய கோப்பை போட்டியில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் விராட் கோலி சதம் அடித்தார். 2019ம் ஆண்டுக்கு பின்னர் சர்வதேச போட்டியில் சதம் அடித்து முத்திரை பதித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.