சேலம் செப், 11
சேலம் மாநகரில் பெய்த தொடர் மழையினால் ஒரு சில பகுதிகளில் உள்ள வீடுகள் மற்றும் தெருக்களுக்குள் மழைநீர் புகுந்தது. இதை தடுக்கும் வகையில் மாநகராட்சி பகுதிகளில் உள்ள அனைத்து ஓடைகள் மற்றும் கால்வாய்களை தூர்வார நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
அதன்படி 33 இடங்களில் ஓடைகள், மழைநீர் கால்வாய்கள் தூர்வாரும் பணி நடைபெற்றது. அஸ்தம்பட்டி மண்டலத்துக்குட்பட்ட டி.வி.எஸ் ஓடை, சூரமங்கலம் மண்டலத்துக்குட்பட்ட சாமிநாதபுரம் ஓடை, அம்மாபேட்டை மண்டலத்துக்குட்பட்ட மிலிட்டரி ரோடு ஓடை, கொண்டலாம்பட்டி மண்டலத்துக்குட்பட்ட குறிஞ்சி நகர் ராஜவாய்க்கால் ஓடைகளில் தூர்வாரும் பணியை கொட்டும் மழையில் மேயர் ராமச்சந்திரன், ஆணையாளர் கிறிஸ்துராஜ் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.