Spread the love

நெல்லை செப், 6

நெல்லை மாவட்டம் திசையன்விளை வி.எஸ்.ஆர் இன்டர்நேஷனல் பள்ளியில் ஆசிரியர் தினவிழா கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பள்ளியின் தாளாளர் வி.எஸ்.ஆர். ஜெகதீஸ், இயக்குனர் சவுமியா ஜெகதீஸ் ஆகியோர் கலந்து கொண்டனர். முதல்வர் எலிசபெத் நிகழ்ச்சியை வழிநடத்தினார்.

இதனைத் தொடர்ந்து முன்னாள் ஜனாதிபதி ராதாகிருஷ்ணனின் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து ஆசிரியர்கள் கேக் வெட்டி ஒருவருக்கொருவர் நல்வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டாடினர்.

மேலும் 9 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்கள் ஆசிரியர்களுக்கு பாடவாரியாக பொது அறிவு வினாக்களை கேட்டனர். ஆசிரியர்களும் தகுந்த விடைகளை அளித்தனர். பின்னர் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. ஆசிரியர்ளுக்கும் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *