Spread the love

நெல்லை செப், 5

நெல்லை மாவட்டம் கூடங்குளம் ஹார்வேர்ட் ஹைடெக் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மற்றும் ஹார்வர்டு இன்டர்நேஷனல் பள்ளி இணைந்து நடத்திய ஆண்டு விழா நடைபெற்றது.

இவ்விழாவுக்கு முதன்மை விருந்தினராக அறிஞர் அண்ணா கல்லூரி முன்னாள் முதல்வர் சுப்பிரமணிய பிள்ளை கலந்து கொண்டு சிறப்புரை வழங்கினார்.
பள்ளி தாளாளர் தினேஷ் மற்றும் ரோசலின்ட் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினர்களாக திருவெம்பலாபுரம் பஞ்சாயத்து தலைவர் முருகன், கூடங்குளம் பஞ்சாயத்து தலைவி வின்சி மணியரசு, இடிந்தகரை பஞ்சாயத்து தலைவர் சகாயராஜ், கூத்தங்குழி பஞ்சாயத்து தலைவி வளர்மதி, ராதாபுரம் பஞ்சாயத்து தலைவி பொன் மீனாட்சி அரவிந்தன், உதயத்தூர் பஞ்சாயத்து தலைவர் கந்தசாமி மணிகண்டன், லயன் செல்வன், ஸ்டீவ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் மெட்ரிக் பள்ளி முதல்வர் முருகேசன் மற்றும் சி.பி.எஸ்.இ. பள்ளி முதல்வர் செல்வராணி ஆகியோர் ஆண்டறிக்கை சமர்ப்பித்தனர். விழாவில் கலை இலக்கிய நிகழ்ச்சிகளை மாணவ மாணவிகள் நிகழ்த்தினர். சிறப்பான சாதனை படைத்த மாணவ- மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மெட்ரிக் பள்ளி துணை முதல்வர் ஜெனி நன்றி கூறினார். விழா ஏற்பாடுகளை முதல்வர்கள் முருகேசன், செல்வராணி மற்றும் துணை முதல்வர்கள் ஜெனி, டேனியல் மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *