சென்னை மார்ச், 23
இலங்கை கடற்படையிடம் இருந்து குடிமக்களை காப்பாற்ற திறனற்ற இந்தியாவிற்கு எதற்கு கடற்படை என சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். உலகில் எந்த நாட்டு ராணுவமும், தம் சொந்த நாட்டு மீனவரை சுட்டுக் கொல்வதை வேடிக்கை பார்க்குமா எனவும் அவர் வினவியுள்ளார். குஜராத் மீனவரை பாகிஸ்தான் சுட்டுக் கொன்றால், கொலை வழக்கு பதிந்து ஐநா வரை செல்லும் ஆட்சியாளர்கள், தமிழக மீனவர்கள் என்றால் அமைதி காப்பதாகவும் சாடியுள்ளார்.