Spread the love

நெல்லை செப், 1

நெல்லை மாவட்டம் அம்பை அருகேயுள்ள வீகேபுரத்தில் தமிழ்நாடு பேரிடர் மீட்பு குழு மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் தாமிரபரணி ஆற்றில் ஏற்படும் வெள்ள அபாயம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அம்பை தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினரின் வெள்ள அபாய ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பொது மக்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.

இந்த ஒத்திகை விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மழை காலங்களில் ஆற்றில் வெள்ளம் வரும்போது வெள்ளத்தில் சிக்கி தவிக்கும் மக்களை காப்பாற்றி அவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்லுதல் ,

ஆற்றில் குளிக்கும்போது தண்ணீரில் இழுத்து கொண்டு செல்பவர்களை மீட்டு குழுவினர் காப்பாற்றுவது குறித்தும் , தண்ணீரில் இருந்து காப்பாற்றியவர்களுக்கு முதலுதவி வழங்கி மீட்பு வாகனம் மூலம் அருகில் உள்ள மருத்துவமணைக்கு கொண்டு செல்லுவது குறித்தும் ஒத்திகை நடத்தி காண்பிக்கப்பட்டது .

இந்நிகழ்சியில் சேரன்மகாதேவி சார் ஆட்சியர் ரிஷப் மற்றும் அம்பாசமுத்திரம் வட்டாட்சியர் ஆனந்த் பிரகாஷ், அம்பாசமுத்திரம் காவல் துணை கண்காணிப்பாளர் பிரான்சிஸ் மற்றும் அம்பாசமுத்திரம் மருத்துவ குழுவினர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *