Spread the love

ஈரோடு செப், 1

ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினம் 748 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் 31 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது. இந்த நிலையில் நேற்று புதிதாக 33 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்து 35 ஆயிரத்து 647 ஆக உயர்ந்தது. இதில் 1 லட்சத்து 34 ஆயிரத்து 653 பேர் குணமடைந்தனர். நேற்று மட்டும் 38 பேர் கொரோனாவில் இருந்து மீண்டனர். தற்போது 260 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுவரை கொரோனாவுக்கு 734 பேர் பலியாகி உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *